×

‘ஜோதிட ரத்னா’கே.பி.வித்யாதரன் ஓய்வூதியர்கள் தேனியில் தர்ணா

தேனி, அக். 12: தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடந்தது. இப்போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ஆண்டவர் தலைமை வகித்தார். சுபபழனி, பிச்சை, பெருமாள்சாமி, ராஜாமணி முன்னிலை வகித்தனர். இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 2006க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கு கிரேடு பே வழங்கி ஓய்வூதியம் திருத்தம் செய்ய வேண்டும்.

மருத்துவக் காப்பீடு திட்டத்தில் 2016 ஜூலை 1ம் தேதி முதல் அனைவரையும் சேர்க்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு நிபந்தனையின்றி சேமிப்பு நிதி வழங்க வேண்டும். மின்வாரிய ஓய்வுபெற்றவர்களுக்கு வைரவிழா சலுகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags : pannars ,Jatitha Rathna ,
× RELATED மூணாறில் மழவில் இரும்பு பாலத்தை புனரமைக்க கோரிக்கை